குளிப்பதைப் படம் எடுத்து.. பலமுறை கெடுத்து.. இளம் பெண் தற்கொலை!

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே 22 வயதான இளம் பெண் குளிப்பதை ஒரு கும்பல் ரகசியமாக படம் பிடித்து வைத்துக் கொண்டு அதைக் காட்டி பலமுறை அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளது. ஒரு கட்டத்தில் இந்தக் கும்பலின் வெறிச்செயல் அதிகரிக்கவே அப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்பு அவர் எழுதி வைத்த கடிதத்தில் யாரெல்லாம் தன்னை நாசப்படுத்தினார்கள் என்பதையும் விரிவாக எழுதி வைத்திருந்ததால் அதன் உதவியோடு 3 பேரை கைது செய்துள்ளனர் போலீஸார்.

செங்கம் அருகே உள்ளது மண்மலை கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த 22 வயது ஆனந்தி பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். கடந்த 23ம் தேதி இவர் தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன்பு ஒரு கடிதத்தை அவர் எழுதி வைத்திருந்தார்.

அதைக் கைப்பற்றிய போலீஸார் அதைப் படித்துப் பார்த்தனர். அதில் ஆனந்தி அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்திருந்தார்.

நான் குளிக்கும்போது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு என்னை இதே ஊரில் உள்ள வினோத்குமார், ஜெகன் உள்பட சிலர் என்னை மிரட்டினர். என்னை தங்கள் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டனர். தினமும்
ஒவ்வொருவராக வந்து என்னை பயன்படுத்திக்கொண்டனர்.

நாங்கள் சொல்லும்போதெல்லாம், எங்களுடன் வரவேண்டும். இல்லையேல் குளியல் வீடியோவை இன்டெர்நெட்டில் வெளியிடுவோம் என்று மிரட்டினார்கள். இதற்கு பயந்து அவர்கள் சொன்னதையெல்லாம் செய்தேன்.

ஆனால் தற்போது அதிகமாக தொந்தரவு செய்து வேறு சிலரையும் அழைத்து வந்து, அவர்களுடனும் இருக்குமாறு கட்டாயப்படுத்தினார்கள். இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன் என்று விரிவாக எழுதி வைத்திருந்தார். இதையடுத்து விசாரணையில் குதித்த போலீஸார் 3 பேரைக் கைது செய்துள்ளனர். மற்றவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+