பள்ளிக்கு செல்போன் கொண்டு வர தடை: மாணவர்களுக்கு எச்சரிச்கை

உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்போன்களை கொண்டு செல்வதும், வகுப்பறையில் பேசுவதும், பள்ளிக்குப்போகும் போதும் வீட்டுக்கு வரும்போதும் அதே கவனத்தில் இருப்பதும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் இனி பள்ளிக்கு செல்போன் கொண்டு வர தடைவிதிக்கும் சுற்றரிக்கை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. பெற்றோர்கள் பள்ளியில் படிக்கும் மகனுக்கோ மகளுக்கோ செல்போன் வாங்கிக் கொடுக்கக்கூடாது. அவ்வாறு கொடுத்தாலும் அதை பள்ளிக்கு கொண்டு செல்ல பெற்றோர் அனுமதிக்கக்கூடாது என்று அறிவுறுத்தும் வகையில் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து கூறியுள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ப.மணி, ஏற்கனவே மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்போன்களை கொண்டுவரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளோம். இப்போது அதை மீண்டும் நினைவுபடுத்த உள்ளோம். செல்போனை எந்த காரணம் கொண்டும் பள்ளிக்கூட வளாகத்திற்கு கொண்டு செல்லக்கூடாது. மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அரசின் இந்த உத்தரவினை அடுத்து இனிமேல் எந்த ஒரு பள்ளிக்கூட மாணவரோ அல்லது மாணவியோ பள்ளிக்கு செல்போன்கொண்டு சென்றால் மாணவர்களின் புத்தகப் பையை ஆசிரியர்கள் சோதனை போடுவார்கள். செல்போன் இருப்பது கண்டுபிடித்தால் அந்த மாணவர்கள் எச்சரிக்கப்படுவார்கள். அடுத்த நாள் பள்ளிக்கு செல்லும்போது பெற்றோருடன் பள்ளிக்கு செல்லவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications