சப் இன்ஸ்பெக்டரை கொடூரமாகக் கொன்று தப்பிய ஏட்டு சரண்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை மாவட்டம் சுரண்டையில், சப் இன்ஸ்பெக்டரைக் கொன்று விட்டுத் தப்பியோடிய தலைமைக் காவலர் இன்று வள்ளியூர் கோர்ட்டில் சரணடைந்தார்.
நெல்லை மாவட்டம் சுரண்டையில் சப் இன்ஸ்பெக்டராக இருந்தவர் இசக்கி. இவருடன் தங்கியிருந்தவர் தலைமைக் காவலர் சண்முகராஜா. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவாகி மோதலாக அது மாறியது.
இந்த நிலையில் கடந்த 26ம் தேதி மாலை, இசக்கியை, ஏட்டு சண்முகராஜா கொடூரமாகக் கொலை செய்து விட்டுத் தப்பியோடினார். ஏட்டு சண்முகராஜா சமீபத்தில் டிரான்ஸ்பர் செய்யப்பட்டிருந்தார். இதற்கு இசக்கிதான் காரணம் என்பதால் ஆத்திரமடைந்து இந்தக் கொலையைச் செய்ததாக தெரிய வந்தது.
போலீஸார் சண்முகராஜாவை தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று அவர் வள்ளியூர் கோர்ட்டில் சரணடைந்தார்.












Click it and Unblock the Notifications