ரம்ஜான் பண்டிகை: பி.எஸ்.என்.எல்.-ன் 786 ஆஃபர்!
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி ரூ.786க்கு ரீசார்ஜ் செய்யும் பிரீபெய்டு செல்போன் வாடிக்கையாளர்கள் 1,572 நிமிடங்களுக்கு கட்டணமின்றி பேசலாம். இதில் 786 நிமிடங்கள் பி.எஸ்.என்.எல். உள்ளூர், எஸ்.டி.டி. எண்களுக்கும், மீதமுள்ள 786 நிமிடங்கள் தனியார் நிறுவன உள்ளூர், எஸ்.டி.டி. எண்களுக்கும் பேசலாம்.
மேலும் 786 எஸ்.எம்.எஸ். அனுப்பலாம், 786 எம்.பி.க்கு தகவல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த சலுகை 2ஜி, 3ஜி சேவை ஆகிய இரண்டுக்கும் பொருந்தும்.
ரீசார்ஜ் செய்து 90 நாட்கள் வரை இந்த சலுகையை பயன்படுத்தலாம். இந்த மாதம் 21ம் தேதி வரை இந்த சிறப்பு சலுகை அமலில் இருக்கும்.
இது தவிர ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் ஈ-ரீசார்ஜ் மற்றும் கார்டு மூலம் ரூ.110, ரூ.220, ரூ.440 மற்றும் ரூ.550க்கு ரீசார்ஜ் செய்தால் முழு தொகைக்கு பேசலாம். இந்த சலுகை வரும் 30 வரை மட்டுமே அமலில் இருக்கும்.