For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெசோ மாநாட்டுக்கு அனுமதி மறுப்பு- நள்ளிரவில் முடிவெடுத்த போலீசார்!

By Mathi
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: திமுக முன்னின்று ஏற்பாடு செய்துள்ள டெசோ மாநாட்டை சென்னையில் நடத்த சென்னை பெருநகர காவல்துறை மறுத்துவிட்டது.

சென்னையில் தமிழக டிஜிபி ராமானுஜத்துடன் சென்னை காவல்துறை ஆணையர் திரிபாதி, கூடுதல் ஆணையர் தாமரைக் கண்ணன் ஆகியோர் வெள்ளிக்கிழமை இரவு பல மணிநேரம் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக்குப் பின்னர் டெசோ மாநாட்டுக்கு அனுமதி தருவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது. இதற்கு 11 காரணங்களையும் சென்னை பெருநகர காவல்துறை கூறியுள்ளது. எப்படியும் டெசோ மாநாட்டுக்கு 1 லட்சம் பேர் வருகை தருவார்கள் என்றும் மெட்ரோ ரயில் பணிகளால் ஏற்கெனவே நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் கூடுதல் சிரமம் ஏற்படும் என்பது உள்ளிட்ட காரணங்கள் அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை வெள்ளிக்கிழமை நள்ளிரவு தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகனிடம் சென்னை போலீசார் கொடுத்தனர்.

English summary
In a major setback to DMK chief Karunanidhi's attempts to revive the defunct Tamil Eelam Supporters Organisation (TESO) the Chennai Police has denied it permission for a public meeting in the city on Sunday.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X