டெசோ மாநாட்டுக்கு அனுமதி, எங்களுக்குக் கிடைத்த பெரும் வெற்றி -திமுக
Subscribe to Oneindia Tamil
சென்னை: டெசோ மாநாட்டை ஒய்எம்சிஏ திடலில் நடத்த தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பு திமுகவுக்கு்க் கிடைத்த வெற்றி என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. தீர்ப்பையும் திமுக உற்சாகத்துடன் வரவேற்றுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி. திடலில் டெசோ மாநாடு நடத்த உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது. பேனர் கட்டுவது, ஒலிபெருக்கிகள் தொடர்பாக சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த தீர்ப்பு திமுகவினர் மத்தியில் பெரும் உற்சாகத்தையும், வெற்றிப் பெருமிதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயர்நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த திமுகவினர் பெரும் உற்சாகக் குரல் எழுப்பினர்.
இந்த தீர்ப்பு குறித்து திமுக வக்கீல்கள் பிரிவு தலைவர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி கருத்து தெரிவிக்கையில், இது திமுகவுக்குக் கிடைத்த வெற்றி என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications