கிரானைட் முறைகேடு ரூ.16,000 கோடி அல்ல ரூ.1,80,000 கோடி: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி
Subscribe to Oneindia Tamil

இது குறித்து அவர் நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மதுரை மாவட்டத்தில் ரூ.16,000 கோடி மதிப்பிலான கிரானைட் கற்கள் சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி குறித்து அரசு அதிகாரிகள் தற்போது ஆய்வு நடத்தி வருகின்றனர். உண்மையில் 1,80,000 கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் கற்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள குளங்கள், சுடுகாடுகள், கோயில்கள் ஆகியவற்றின் வழிப்பாதைகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வரும் 16ம் தேதி சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications