ரோட்டில் ஆசிரியையின் 8 பவுன் செயினும், ரயிலில் பெண் எஸ்.ஐ.-ன் 9 பவுன் செயினும் பறிப்பு
சேலம்: சேலத்தில் பள்ளி ஆசிரியை மற்றும் பெண் எஸ்.ஐ.யின் கழுத்தில் கிடந்த தங்க செயின்கள் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் நிர்மலா. புங்கன்வாடி பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். அவர் இன்று காலை தனது இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு கிளம்பினார். அவர் ஆத்தூரை அடுத்து உள்ள மஞ்சினி பாலம் அருகே சென்று கொண்டிருக்கையில் அந்த வழியாக ஒரு பைக் வந்தது. அதில் ஹெல்மெட் அணிந்த இருவர் இருந்தனர். அவர்கள் திடீர் என்று நிர்மலாவின் கழுத்தில் இருந்த 8 பவுன் செயினைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிவிட்டனர்.
ஆவடி பட்டாலியனைச் சேர்ந்தவர் சப் இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி. அவர் இன்று காலை ஏற்காடு எக்ஸ்பிரஸில் சேலத்திற்கு வந்தார். ரயில் மொரப்பூர் அருகே சென்று கொண்டிருந்தபோது ஜன்னல் சீட்டில் உட்கார்ந்திருந்த உஷா நந்தினியின் கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு ஒருவர் தப்பியோடிவிட்டார். இது குறித்து அவர் சேலம் ரயில்வே போலீசில் புகார் கொடுத்தார்.












Click it and Unblock the Notifications