தக்க சமயத்தில் கல்லீரல் தானம் கிடைக்காததாலேயே தேஷ்முக் இறந்தார்: டாக்டர் பேட்டி

கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதாக இருந்தது. ஆனால் தக்க சமயத்தில் கல்லீரல் கிடைக்காததால் அவர் நேற்று மரணம் அடைந்தார்.
இது குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறுகையில்,
கல்லீரல் கோளாறு காரணமாக கடந்த 6ம் தேதி எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கிற்கு கல்லீரல் பிரிவு சிறப்பு மருத்துவக்குழு சிகிச்சை அளித்தது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் 1.40 மணிக்கு மரணம் அடைந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவருடையை உடல் நிலை சற்று தேறியபோதும் அவருடைய கல்லீரல் செயல்பாடு மோசமாக இருந்தது. அதனால் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தோம். நேற்று முன்தினம் விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்த டிரைவர் ஒருவரின் கல்லீரலை தானமாக பெறுவதாக இருந்தது. ஆனால் அதை வாங்க நாங்கள் அரசு பொது மருத்துவமனைக்கு செல்வதற்குள் அவர் இறந்துவிட்டார்.
அதே சமயம் தேஷ்முக்கின் உடல் நிலை மோசமானது. குறிப்பாக ரத்த அழுத்தமும், ஆக்சிஜன் அளவும் குறைந்ததால் அவர் இறந்தார். தமிழகம் தவிர குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் அவருக்கு கல்லீரல் கிடைப்பதாக இருந்தது. ஆனால் அதற்குள் அவர் துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்டார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் எங்களுக்கு ஆலோசனை வழங்கி உதவிகள் செய்தாலும் அவருக்கு பொருத்தமான கல்லீரல் தக்க சமயத்தில் கிடைக்காமல் போனது. அவருடைய மரணம் அனைவருக்கும் ஒரு பாடம். இனியாவது உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை சமுதாயத்திற்கு எடுத்துக் கூறுங்கள்.
மேற்கத்திய நாடுகளில் கல்லீரல் போன்று உறுப்புகள் உடனுக்குடன் கிடைக்கும். ஆனால் நம் நாட்டில் அப்படி இல்லை. உடல் உறுப்பு தானம் குறைந்த அளவில் செய்யப்படுவதே அதற்கு காரணம். இருப்பினும் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னோடியாக உள்ளது.
தேஷ்முக்கின் மறைவால் நாம் ஒரு சிறந்த தலைவரையும், மனிதநேயமுள்ள மனிதரையும் இழந்துவிட்டோம். அவருடைய குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications