சொத்துகுவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது வழக்குப்பதிவு
சென்னை : வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் உள்ளிட்ட 18 பேர் மீது சிறப்பு நீதிமன்ற நீதிபதி வெள்ளிக்கிழமையன்று குற்றச்சாட்டுப்பதிவு செய்தார். இதையடுத்து வழக்கின் சாட்சி விசாரணை 31-ந் தேதி முதல் நடைபெற உள்ளது.
1991 ம் ஆண்டு ஜெயலலிதா அமைச்சரவையில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக 17.6.1991 முதல் 13.5.1996 வரை பதவி வகித்தவர் ராஜ கண்ணப்பன். இவர், அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக புகார் எழுந்தது. ரூ.11 கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 252 மதிப்புள்ள கட்டிடங்கள், நிலங்கள், வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை தன் பெயரிலும், தனது மனைவி, தாயார் மற்றும் உறவினர் பெயரிலும் வாங்கியதாக 1996-ம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கண்ணப்பனின் மனைவி நளாயினி, தாயார் ராஜலட்சுமி, தம்பி செந்தாமரை உள்ளிட்ட 20 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். சென்னையிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை 2005-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகை நகல் 2007-ம் ஆண்டு கண்ணப்பன் உள்பட 20 பேருக்கும் வழங்கப்பட்டது. இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட நளாயினி, ராஜலட்சுமி ஆகியோர் இறந்துவிட்டனர். இதையடுத்து இவர்கள் 2 பேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.செல்வகுமார் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சுமத்தப்பட்ட கண்ணப்பன் உள்பட 18 பேர் கோர்ட்டில் ஆஜராகினர். குற்றப்பத்திரிகையில் போலீசார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து, கண்ணப்பன் உள்பட 18 பேரிடம் நீதிபதி கேள்வி கேட்டார். அதற்கு 18 பேரும், தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக கூறினர்.
இதையடுத்து இந்த வழக்கை 31-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஆர்.செல்வகுமார் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் மொத்தம் 388 பேர் உள்ளனர். இதில் முதல் சாட்சி 31-ந் தேதியன்று நேரில் ஆஜராகி சாட்சியம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூருவில் நடைபெற்று வரும் ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கினை போல இந்த வழக்கும் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications