கிரானைட் கொள்ளையை அம்பலப்படுத்திய முன்னாள் ஆட்சியர் சகாயத்துக்கு கொலை மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

Sagayam
சென்னை: தமிழகத்தை உலுக்கியுள்ள கிரானைட் கொள்ளையை அம்லப்படுத்தி அரசுக்கு அறிக்கை அளித்த மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயத்துக்கு சில மர்ம கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது,.

மதுரையில் கிரானைட் கொள்ளையில் ஈடுபட்டு பெரும் சாம்ராஜ்யத்தையே நடத்திக் கொண்டிருந்த பி.ஆர். பழனிச்சாமி இப்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி உள்ளிட்ட 22 பேர் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டனர். இவர்கள் முன் ஜாமீனுக்காகக் காத்திருக்கின்றனர்.

தமிழக அரசும் கிரானைட் கொள்ளையை விட்டுவிடுவதாக இல்லையென முன்னாள், இந்நாள் அதிகாரிகள் என அனைவரையும் ரவுண்டு கட்டி அடித்து வருகிறது.

இந்நிலையில் அரசுக்கு அறிக்கை கொடுத்த முன்னாள் ஆட்சியர் சகாயத்தை கொலை செய்யவும் கிரானைட் கொள்ளை கும்பல் முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. அரசிடம் பாதுகாப்பு கோரவும் சகாயம் குடும்பத்தினர் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+