கணவரை பிரிந்து வாழும் பெண்ணுடன் குடித்தனம் - உறவுக்கார பையனை தூக்கிய திமுக எம்.எல்.ஏ மீது புகார்

சென்னை சாலிகிராமம் வால்மீகி தெருவைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் அன்னலட்சுமி கணவரை பிரிந்து வாழ்கிறவர். இவருடக்கும் கம்பத்தைச் சேர்ந்த ரூபேஸ் எனவருக்கும் காதல் ஏற்பட கடந்த மாதம் கல்யாணமும் செய்து கொண்டனர். அன்னலட்சுமி திருமணம் செய்து கொண்ட ரூபேஸின் மாமா திமுக எம்.எல்.ஏ. கம்பம் ராமகிருஷ்ணன்.
அன்னலட்சுமியுடன் குடித்தனம் நடத்திக் கொண்டிருந்த ரூபேஸை ராமகிருஷ்ணனின் ஆட்கள் கம்பத்துக்கு தூக்கிச் சென்றுவிட்டனர். அன்னலட்சுமியால் ரூபேஸை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் இப்போது சென்னை மாநகர காவல்துறையிடம் புகார் செய்துள்ளார்.
தம்மிடம் எம்.எல்.ஏ, கம்பம் ராமகிருஷ்ணன் பேசியதாகவும் ரூபேசை விட்டு விலகிப் போய்விடு என்று எச்சரித்ததாகவும் அன்னலட்சுமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ரூபேஸின் உறவினர்கள் கூறுவதைப் போல தாம் சொத்துக்கு ஆசைப்பட்டு ரூபேஸை திருமணம் செய்யவில்லை.. சொத்து எதுவும் இல்லாமல் ரூபேஸுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications