2வது வழக்கில் ஷானாஸைக் கைது செய்கிறது போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

Shanaz
சென்னை: திருமண மோசடி செய்ததாக கூறி கைதாகியுள்ள கேரள இளம் பெண் ஷானாஸை 2வது வழக்கில் சென்னை போலீஸார் கைது செய்கின்றனர்.

பெங்களூரில் தலைமறைவாக இருந்த ஷானாஸை சென்னை தனிப்படை போலீஸார் கைது செய்து சென்னை கொண்டு வந்து தற்போது புழல் மகளிர் சிறையில் அடைத்துள்ளனர்.

அவரை அடையாறு சரவணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சாஸ்திரி நகர் போலீஸார் கைது செய்தனர். இந்தப் புகாரின் பேரில்தான் தற்போது ஷானாஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் முகலிவாக்கம் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் தற்போது மாங்காடு போலீஸாரும் ஷானாஸைக் கைது செய்கின்றனர். இதற்காக கோர்ட் அனுமதியைக் கோரியுள்ளனர். அனுமதி கிடைத்ததும் கைது செய்யவுள்ளனர்.

இவர்கள் தவிர புளியந்தோப்பு பிரசன்னா, புரசைவாக்கம் சம்சுதீன், திருவொற்றியூர் சரவணன் ஆகியோர் கொடுத்த புகார்களும் பெண்டிங்கில் உள்ளன. இவர்கள் புகாரின் மீதும் நடவடிக்கை எடுத்து ஷானாஸைக் கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே சிறையில் ஷானாஸ் படு உற்சாகமாக இருக்கிறாராம். அவரிடம் பல்வேறு பெண் கைதிகளும் கதை கேட்டு வருகின்றனராம். அவர்களிடமும் தான் நான்கு திருமணங்களை மட்டுமே செய்தேன் என்று கூறி வருகிறாராம் ஷானாஸ்.

அவர் கர்ப்பமாக இருப்பதால் தினசரி அவரை டாக்டர்கள் பரிசோதித்து வருகின்றனராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+