நாட்டில் 40% கழிவறைகளை சுத்தப்படுத்துவது பன்றிகளும் நாய்களும் தான்!

மனிதக் கழிவுகளை மனிதனே நேரடியாக சுத்தம் செய்யும் அவலமான நிலையை தடை செய்யும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது.
இது குறித்து சபாஸ் கரம்சாரி ஆந்தோலன் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,
2011ம் ஆண்டு மத்திய அரசின் சென்ஸஸ் விவரப்படி நாட்டில் 7.94 லட்சம் கழிப்பறைகளை மனிதர்கள் சுத்தம் செய்கிறார்கள்.
4.97 லட்சம் கழிப்பறைகளில் மனிதக் கழிவுகளை பன்றிகள், நாய்கள் உள்ளிட்ட விலங்குகள் சுத்தம் செய்கின்றன (சாப்பிடுகின்றன).
நாட்டில் உள்ள 24.6 கோடி வீடுகளில் 26 லட்சம் கழிப்பறைகள் கொஞ்சம் கூட சுத்தம் இல்லாதவை. 13.14 லட்சம் கழிப்பறைகளில் இருந்து வெளியேறும் மனிதக் கழிவுகள் நேரடியாக சாக்கடைகளில் கலக்கின்றன.
12.91 லட்சம் கழிப்பறைகளில் சேரும் மனிதக் கழிவுகளை 'சுத்தப்படுத்துவது' மிருகங்கள் தான்.
உத்தரப் பிரதேசத்தில் தான் நாட்டிலேயே மிக அதிக அளவாக 3.26 லட்சம் கழிப்பறைகள் உள்ள கழிவுகள் மனிதர்களால் அகற்றப்படுகின்றன. மேலும் இந்த மாநிலத்தில் சுமார் 80,000 கழிப்பறைகளில் சேரும் மனிதக் கழிவுகள் விலங்குகளால் மட்டுமே அகற்றப்படுகின்றன.
இந்த படு கேவலமான விஷயத்தில் மேற்கு வங்கம், ஒடிஸ்ஸா, பிகார், அஸ்ஸாம் மாநிலங்கள் அடுத்தடுத்த நிலையில் உள்ளன.
குஜராத்தில் விலங்குகளால் சுத்தப்ப்படுத்தப்படும் கழிப்பறைகள் எண்ணிக்கை, மனிதர்களால் சுத்தப்படுத்தப்படும் கழிப்பறைகளை விட அதிகம்.
ஆந்திராவில் 52,767 கழிப்பறைகளும், கர்நாடகத்தில் 28,995 கழிப்பறைகளும், தமிழகத்தில் 26,020 கழிப்பறைகளும் விலங்குகளால் சுத்தப்படுத்தப்படுகின்றன.
ஆந்திராவில் 10,357 கழிப்பறைகளிலும், கர்நாடகத்தில் 7,740 கழிப்பறைகளிலும், தமிழகத்தில் 27,659 கழிப்பறைகளிலும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் கொடூரம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications