அப்படி ஒன்னும் ரொம்ப ஈசியாக புதிய சமையல் எரிவாயு இணைப்பு கிடைச்சுடாது!

Subscribe to Oneindia Tamil

Gas
டெல்லி: சமையல் எரிவாயு இணைப்புகளை முறைப்படுத்தும் விதமாக ஏற்கெனவே விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் சமையல் எரிவாயு வழங்கும் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து ஆய்வு செய்து வருகின்றன. புதிய எரிவாயு கோரி வரும் விண்ணப்பங்களை கவனமாக பரிசீலிக்குமாறும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது.

புதிய எரிவாயு இணைப்பு பெறுவோருக்கு விநியோகிப்பாளர்களே ஆவணங்களை சரிபார்த்து வந்தனர். ஆனால் இந்த நடைமுறையால் ஒருநபர் வேறு நிறுவனங்களிடமிருந்து கூடுதல் எரிவாயு இணைப்பை பெற்றுக் கொள்ள வாய்ப்பும் இருந்தது. தற்போது அனைத்து நிறுவனங்களினதும் புதிய இணைப்பு கோரும் விண்ணப்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு நன்கு பரிசீலிக்கபப்ட்ட பிறகே புதிய இணைப்பு வழங்கப்பட இருக்கிறது.

இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலிய நிறுவனங்கள் ஏற்கெனவே 1 கோடி போலி எரிவாயு இணைப்புகளை கண்டறிந்து அவற்றை நிறுத்தி வைத்திருக்கின்றனர். ஒரே வீட்டில் இந்த 3 நிறுவனங்களிடமிருந்தும் எரிவாயு இணைப்பு பெற்றவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் என்பதும் கூட தெரியவந்தது. இப்படி போலியான இணைப்பை பெற்றிருப்போருக்கு நிறுவனங்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டு அவற்றை திருப்பி ஒப்படைக்குமாறும் அறிவுறுத்தபப்ட்டிருக்கிறது.

இதற்காக புதிய சமையல் எரிவாயு இணைப்பு கோரி விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்களை நன்கு பரிசீலிக்குமாறு மாநில மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. புதிதாக விண்ணப்பித்திருப்பவர் வேறு நிறுவனங்கள் மூலம் ஏற்கெனவே எரிவாயு இணைப்பு பெற்றிருக்கிறாரா என்பதை ஆராய்வும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+