நெல்லை மாவட்டத்தில் 15 பேருக்கு நல்லாசிரியர் விருது
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் 15 பேருக்கு மாநில அரசின் நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கிடைத்துள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் விருந்து வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலை கல்வித் துறை வெளியிட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 15 பேர் மாநில அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் விபரம் வருமாறு,
ஜேக்கப் அருள் மாணிக்கம், தலைமை ஆசிரியர், ஐசிஐ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தென்காசி. தற்போது தென்காசி கல்வி மாவட்ட அலுவலராக பொறுப்பு வகிக்கிறார். வைகுண்டராமன் (தலைமை ஆசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பத்தமடை), மஜித் (தலைமை ஆசிரியர், ரஹ்மானியா மேல்நிலைப்பள்ளி, மேலப்பாளையம்), மரிய ஆல்பர்ட் (முதுநிலை ஆசிரியர், சவேரியர் மேல்நிலைப்பள்ளி, பாளை), பவர் சிங் (தலைமை
ஆசிரியர், புனித அன்னை மேல்நிலைப்பள்ளி, உவரி), இசக்கி (தமிழ் ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, வி,கே,புதூர்), ரேவதி (இடைநிலை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தேவர்குளம்), மேரி கிரேஸ் (இடைநிலை ஆசிரியை, இளையரசனேந்தல்), காந்திமதி (தலைமை ஆசிரியர், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, குருதுடையார்புரம், நெல்லை), வீரபாண்டியன் (பட்டதாரி ஆசிரியர், புனித தெரசா, ஆர்சி நடுநிலைப்பள்ளி, புஷ்பவனம், வள்ளியூர் ஒன்றியம்), சாமுவேல் (தலைமை ஆசிரியர், எஸ்சி தொடக்கபள்ளி, கல்லிடைக்குறி்ச்சி), பொன்ராஜ் (தலைமை ஆசிரியர், டிடிடிஏ நடுநிலைப்பள்ளி, கிரைக்காரன்தட்டு, ராதாபுரம் தாலுகா), ஆமீனாள் (பட்டதாரி ஆசிரியை, எம்எம் நடுநிலைப்பள்ளி, விஸ்வநாதபுரம், விஸ்வநாதபுரம் சரகம்), செல்வசவுந்திரபாண்டியன் (தலைமை ஆசிரியர், இந்து நடுநிலைப்பள்ளி, சிவநாடானூர்), எட்வர்ட் தேவநாதன் (இடைநிலை ஆசிரியர், ஆர்சி தொடக்கப்பள்ளி, தென்காசி)
இவர்களுக்கு சென்னை சேத்துப்பட்டு எம்எம்சி மேல்நிலைப்பள்ளியில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கும் விழாவில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.











Click it and Unblock the Notifications