இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்- 5 தமிழக மீனவர்கள் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டினம்: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் மீண்டும் தாக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதலில் 5 மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகுகளில் கோடியக்கரை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருதனர். அப்போது அவர்களது படகுகளை வழிமறித்த இலங்கை கடற்படையினர் மீன்வர்களை தாக்கி விரட்டியடித்திருக்கின்றனர். இதையடுத்து தமிழக மீனவர்கள் உயிர்தப்பி கரைக்குத் திரும்பினர்.
கடந்த ஒரு வார காலத்தில் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்துகிற 3-வது தாக்குதல் இது.












Click it and Unblock the Notifications