சாய்பாபா மரணத்தில் மர்மம்: சிபிஐ விசாரணை கோரி ஆந்திர வியாபாரி வழக்கு

புட்டபர்த்தி சத்ய சாய்பாபா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மரணம் அடைந்தார். அவர் மறைவுக்குப் பிறகு அவரது சொத்துக்கள் சாய் அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் சாய்பாபாவின் சீடரான சத்யஜித் அண்மையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் சாய்பாபாவின் உயில் விவரங்களை தெரிவித்தார்.
தனது சொத்துக்கள் அனைத்தும் பக்தர்களின் நன்கொடையால் வந்தவை என்பதால் தனது மறைவுக்குப் பிறகு அவை அனைத்தும் ஏழைகளுக்கே செல்ல வேண்டும் என்று அவர் தனது உயிலில் குறிப்பிட்டுள்ளதாக சத்யஜித் தெரிவித்தார். இதனால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் சாய்பாபாவின் மரணத்தில் மர்மங்கள் இருப்பதாகவும், அதனால் அது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் ஹைதராபாத்தைச் சேர்ந்த வியாபாரி கே. ரமேஷ் மனு தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து அவர் ஹைதராபாத்தில் உள்ள நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
சாய்பாபா மரணத்தின்போது அவர் தங்கியிருந்த அறையில் இருந்து பல லட்சம் மதிப்புள்ள தங்கம், மற்றும் ஏராளமான பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் பரவியது. சாய்பாபாவுக்கு சிசிக்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த தகவல் அனைத்துமே உறுதி செய்யப்படவில்லை.
மேலும் சாய்பாபா தனது சொத்து பற்றி உயில் எழுதவில்லை என கூறப்பட்டது. இப்போது உயில் எழுதி இருப்பததாக அவரது சீடர் சத்யஜித் கூறுகிறார். அவர் ஏன் இதனை இவ்வளவு தாமதமாக சொன்னார் என்பதும் புரியவில்லை.
தற்போதைய அறக்கட்டளை குழுவினர் ஆசிரம சொத்துக்களை தங்கள் சொத்துபோல பாவிக்கிறார்கள். எனவே சாய்பாபா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி எல்லா உண்மைகளையும் வெளிக் கொண்டுவர வேண்டும். மேலும் திருப்பதி கோவில்போல் ஆசிரமத்துக்கு அறங்காவலர் குழு நியமிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications