காவிரி நதிநீர் வழக்கு: தமிழகத்துக்கு நீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

Supreme Court
டெல்லி: தமிழ்நாட்டுக்கு செப்டம்பர் 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை நாள்தோறும் நீரை திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதிநீரைத் திறந்துவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது. இன்றைய விசாரணையின் போது கர்நாடக அரசு தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்துக்கு தினமும் வினாடிக்கு 2,500 கன அடி நீரைத் திறந்துவிட கர்நாடகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்துக்கு ஏற்கெனவே 7,500 கன அடி நீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழகம் கோரிய நீரின் அளவைவிட குறைவானதுதான்.

இதைத் தொடர்ந்து தமிழகத்துக்கு செப்டம்பர் 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை நாள்தோறும் 86 கோடி கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

இதனிடையே வரும் 19ம் தேதி காவிரி நதிநீர் ஆணையம் கூட இருக்கிறது. தற்போதைய உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து நதிநீர் ஆணைய கூட்டத்தின் முடிவுக்குப் பிறகு தமிழக அரசு தமது நடவடிக்கையை மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+