கூடங்குளம்: 5 பத்திரிக்கையாளர்கள் மீது போலீஸ் தாக்குகள்-கேமராக்ளைப் பறித்து கடலில் வீசினர்
Subscribe to Oneindia Tamil

கூடங்குளம் கடற்கரையில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களை இன்று போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் விரட்டியடித்தனர். பதிலுக்கு பொதுமக்களும் கடற்கரை மணலை தூக்கி வீசி போலீஸார் மீது தாக்குதலில் இறங்கினர்.
இந்த வன்முறையில் பத்திரிக்கையாளர்களும் போலீஸாரின் தாக்குதலிலிருந்து தப்பவில்லை. ஜீ டிவி செய்தியாளர் ராமலிங்கம் போலீஸ் தாக்குதலில் காயமடைந்தார். அதேபோல அந்த டிவியின் கேமராமேன் வெங்கட் கையில் வைத்திருந்த கேமராவைப் பறித்த போலீஸார் அதை கடலில் வீசி எறிந்து விட்டனர்.
போலீஸ் தாக்குதலில் மலையாளப் பத்திரிக்கையாளர் உள்பட 5 பேர் லேசான காயமடைந்தனர். அவர்களிந் கேமராக்களையும் போலீஸார் பறித்து உடைத்து விட்டனர்.












Click it and Unblock the Notifications