அக். 9 வரை கூடங்குளத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு நீடிக்கும்
Subscribe to Oneindia Tamil

கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீண்டும் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த முறை இப்போராட்டம் வன்முறை மற்றும் கலவரத்தில் முடிந்துள்ளது. இந்த வன்முறை, கலவரத்தை அடக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு மீனவர் பலியாகியுள்ளார். ஒரு குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இந்த நிலையில் கூடங்குளம் அணு மின் நிலையப் பகுதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் செல்வராஜ் கூறுகையில்,
கூடங்குளம் அணுஉலையை சுற்றி 7 கி.மீ. தொலைவுக்கு 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. 10.09.2012 மாலையுடன் முடிவடைந்த தடை உத்தரவு அக்டோபர் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications