பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பிள்ளையார்பட்டி: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.
தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து செல்லும் பிரசித்தி பெற்ற கோவில் அருள்மிகு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயம். இந்த கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு்க்கான விழா நேற்று காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான விநாயகர் சதுர்த்தி விழா வரும் 19ம் தேதி கொண்டாடப்படுகிறது. கொடியேற்றத்திற்கு முன்பு கற்பக விநாயகர் கோவில் எதிரே உள்ள திருக்குளத்தில் தீர்த்தவாரிய உற்ச்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. திங்கட்கிழமை துவங்கிய இந்த திருவிழா வரும் 19ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர்கள் லெட்சுமணன் செட்டியார், சிதம்பரம் செட்டியார் ஆகியோர் செய்துள்ளனர்.