கேம்பஸ் இன்டர்வியூ.. வேலைக்கு ஆள் எடுப்பதை குறைத்துக் கொண்ட சாப்ட்வேர் நிறுவனங்கள்
சென்னை: சாப்ட்வேர் நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களைச் சேர்ப்பதை குறைத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளன.
வழக்கமாக செப்டம்பர் மாதத்தில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் கேம்பஸ் இன்டர்வியூக்கள் நடக்கும். இந்த ஆண்டும் கேம்பஸ் செலக்ஷன் நடந்தாலும், அதில் பங்கேற்க வரும் சாப்ட்வேர் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அவர்கள் பணிக்குத் தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் குறைந்துள்ளது.
வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் கடந்த 3 நாட்களாக நடந்த கேம்பஸ் இன்டர்வியூவில் 3,603 பேர் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் அக்சென்சர் நிறுவனம் 1,492 பேருக்கும், விப்ரோ 1,308 பேருக்கும் வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது.
இந்த ஆண்டு இந்த கல்வி மையத்துக்கு 55 நிறுவனங்களே கேம்பஸ் இன்டர்வியூ நடத்த வந்தன. வழக்கமாக 150 நிறுவனங்கள் வரை வருவது வழக்கமாகும். கடந்த ஆண்டு மிக அதிகபட்சமாக 188 நிறுவனங்கள் வந்து 95 சதவீதம் பேரை தேர்வு செய்துவிட்டுப் போயின.
ஆனால், இந்த ஆண்டு இதுவரை 55 நிறுவனங்களே வந்துள்ளன. குறைவானவர்களையே தேர்வு செய்துள்ளன. மேலும் கடந்த ஆண்டு தந்த அதே ஊதியத்தையே கிட்டத்தட்ட இந்த ஆண்டும் தர முன் வந்துள்ளன.












Click it and Unblock the Notifications