டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்- கேரளாவில் பந்த்- தமிழக பேருந்துகள் நிறுத்தம்
திருவனந்தபுரம்: மத்திய அரசின் டீசல் விலை உயர்வு முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் கூட்டணிக் கட்சிகள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், கொச்சி, ஆலப்புழா, திருச்சூர் நகரங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதுபோல கேரளா முழுவதும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் ஓடவில்லை. ஆட்டோ-டாக்சிகளும் ஓடவில்லை.
கொச்சி துறைமுகத்திலும் இன்று பணிகள் எதுவும் நடைபெறவில்லை. பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வராததால் அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன. சரக்கு ஏற்றி இறக்கும் பணிகளும் பாதிக்கப்பட்டன. முழு அடைப்பு காரணமாக கேரளா அரசு இன்று பள்ளிகள்-கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தது. இன்று நடைபெறுவதாக அரசு தேர்வாணைய தேர்வுகளும் பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
கேரளாவில் நடைபெறும் முழு அடைப்பையொட்டி தமிழகத்தில் இருந்து செல்லும் பேருந்துகள் கேரளா எல்லை யுடன் நிறுத்தப்பட்டது. நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் ஊர்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications