அட, ஐ.நா.வில் அரை மணி நேரம் பேசவிட்டால் நான் தனி ஈழம் அடைந்துவிடுவேன்: சீமான் பேட்டி

ஆனந்த விகடன் வார இதழுக்கு சீமான் அளித்திருக்கும் பேட்டியில் கூறியுள்ளதாவது:
கேள்வி: 'சரி... நீங்கள் பிரதமராகவோ, தமிழ்நாட்டின் முதல்வராகவோ இருந்தால், இலங்கையுடனான உறவை எப்படி அணுகுவீர்கள்?''
பதில்: ''பிரதமராவது என் கனவல்ல. ஒரே கனவு... 12 கோடி மக்கள், இரண்டு பெரும் தாய்நிலங்களைக்கொண்ட ஓர் இனத்தைச் சேர்ந்த மக்கள், தங்களுக்கு என்று ஒரு நாடு அடைந்து, சுதந்திரமாக வாழ வேண்டும். இலங்கை இரு நாடுகளாக வேண்டும். அதுதான் கனவு.''
கேள்வி: ''அடிப்படையில் உங்கள் இயக்கத்தின் இலக்குதான் என்ன?''
பதில்: ''இலக்கு ஒன்றுதான். இனத்தின் விடுதலை!''
கேள்வி: ''ஈழத் தமிழர்களுக்குத் தனி நாடு காணும் உங்கள் கனவு, இந்தியத் தமிழர்களுக்கும் நீளுமா?''
பதில் : ''இல்லை. ஆனால், இந்தியாவை ஆளும் தேசியக் கட்சிகள் இந்த நிலத்தில் இருந்து நாங்கள் பிரிந்துபோவதற்கான காரணங்களை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன என்று மட்டும் சொல்வேன். தவித்த வாய்க்குத் தண்ணீர் தராத ஒரு தேசத்தின் மீது எப்படி வரும் எனக்கு நேசம்?''
கேள்வி: ''தமிழீழத்தை அடைய என்ன திட்டம் உங்களிடம் இருக்கிறது?''
பதில்: ''அரசியல் புரட்சி. 12 கோடித் தமிழரில் ஒரு 50,000 பேரை ஒன்று திரட்டிவிட்டால்கூட மிகப் பெரிய புரட்சி. அட, ஐ.நா. சபைக்குள் என்னை அரை மணி நேரம் பேசவிடுங்கள். நான் நாடு அடைந்துவிடுவேன்! என்று கூறியுள்ளார்.
அப்புறம் எதுக்கு புரட்சி? ஆயுதம்? போராட்டம்? இல்லைங்கண்ணா.....












Click it and Unblock the Notifications