கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 3 நாளில் யுரேனியத்தை 'ரொப்பிருவோம்'... நாராயணசாமி சொல்கிறார்!
பழனி: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இன்னும் மூன்றே நாட்களில் யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி முடிவடையும் என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
நாராயணசாமிதான் கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாடுகளை அவ்வப்போது பறை சாற்றி வருகிறார். இதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் கூட சமீபத்தில் வாங்கிக் கட்டிக் கொண்டார். அதையடுத்து சற்று அமைதி காத்து வந்த அவர் தற்போது மறுபடியும் பேசத் தொடங்கியுள்ளார்.
பழனிக்கு வந்த அவர் அங்கு பாலதண்டாயுதபாணியை கும்பிட்டு பயபக்தியுடன் வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சிவகாசி பட்டாசு விபத்தில் பலியான குடும்பத்தினருக்கு ரூ.2 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகள் மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
சிவகாசி எம்.பி. மாணிக் தாகூர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் விஞ்ஞான பூர்வமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு ரெயில்வே துறை, தபால் துறையில் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கூடங்குளத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டம் அர்த்தமற்றது. சென்னை உயர்நீதிமன்றமே அணு உலை மிகவும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளது. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் ரஷிய விஞ்ஞானிகள் அணு உலையில் யுரேனியம் நிரப்புவதற்காக ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அதற்கான உத்தரவுகள் வரும். பின்னர் 3 நாட்களுக்குள் அணு உலைகளில் யுரேனியம் எரி பொருள் நிரப்பும் பணி தொடங்கும். அதன் பின்பு 25 நாட்களில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்படும்.
தமிழ்நாட்டில் தற்போது மின்சாரம் தட்டுப்பாடு அதிகரித்து காணப்படுகிறது. எனவே கூடங்குளத்தில் தயாரிக்கப்படும் முழு மின்சாரத்தையும் தமிழ கத்திற்கே வழங்க பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நான் வலியுறுத்துவேன். பாராளுமன்றத்தை முடக்கி வரும் பாரதீய ஜனதாவால் மக்களின் வரிப்பணம் ரூ.52 கோடி வீணாகி உள்ளது. இதற்கு முழு பொறுப்பு பாரதீய ஜனதா கட்சிதான் என்று பேசினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications