இந்து மதத்தை இழிவுபடுத்தினாரா ஐஏஎஸ் அதிகாரி உமா சங்கர்?
சேலம்: இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் நடந்து கொண்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி சேலம் மாவட்டம் ஆத்தூரில் போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
ஆத்தூர் அண்ணா கலையரங்கில் செப்டம்பர் 15ம் தேதி கிறிஸ்தவ நிகழ்ச்சி ஒன்று நடந்தது. உலகத்துக்கு எதிர் வரும் ஆபத்தை காப்பதற்கான எழுப்புதல் என்ற பெயரில் நடந்த அந்த நிகழ்ச்சியில் கிறிஸ்தவ மதபோதகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் உமாசங்கர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், இந்த ஆண்டு, டிசம்பர் மாதம், உலகின் பெரும்பகுதி ஒரு அழிவை சந்திக்க உள்ளது. இதிலிருந்து நீங்கள் அனைவரும் தப்பிக்க வேண்டும்.
கிறிஸ்துவ மதத்தின் கருத்துகளை, பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். கிறிஸ்துவர்கள் யாரும் ஜாதகம் பார்க்க கூடாது, உங்கள் வீட்டில் ஜாதகம் இருந்தால் உடனே தூக்கி தீயில் போட்டு கொளுத்துங்கள். அதுமட்டுமல்ல, ராகுகாலம் எமகண்டம் போன்ற தகவல்களை குறிப்பிட்டுள்ள காலண்டர்களையும் வீட்டிலிருந்து தூக்கி வீசுங்கள். ஆழத் தீயிட்டு கொளுத்துங்கள், குப்பைகளில் வீசியெறியுங்கள் என்று பேசியதாக தெரிகிறது.
இதற்கு பாஜக உள்ளிட்ட இந்து கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், இந்து மத நம்பிக்கைகளை இழிவுப்படுத்தி பேசிவரும், தமிழக அரசின் ஒழுங்கு ஆணைய கமிஷனர் உமாசங்கரை கைது செய்ய வேண்டும் என, வலியுறுத்தி, இந்து முன்னணி, சேலம் மாவட்ட தலைவர் செல்லமுத்து தலைமையிலான நிர்வாகிகள், நேற்று, ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
மேலும் முதல்வர் ஜெயலலிதா, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர், கோவை மேற்கு மண்டல ஐஜி, சேலம் எஸ்பி உள்ளிட்டோருக்கும் புகார்களை அனுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக விசாரணை நடந்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications