காங். காரியக் குழு கூட்டத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை திரிணாமுல் காங்கிரஸ் திரும்பப் பெற்ற நிலையில் முதல் முறையாக காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் கூடியது. இக்கூட்டத்துக்கு காங்கிரஸ் ஆளும் அனைத்து மாநில முதல்வர்களும் அழைக்கப்பட்டிருக்கின்றனர்.
காங்கிரஸ் பொதுச்செயலாளராக இருக்கும் ராகுல் காந்திக்கு கூடுதலாக கட்சியிலும் ஆட்சியிலும் முக்கியத்துவம் கொடுப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் மத்திய அரசு மீதான நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் குற்றச்சாட்டை சமாளிப்பது எப்படி என்றும் இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்தக்க் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவேதி, நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் விவரித்ததாகக் கூறினார். மேலும் பிரதமர் மன்மோகன்சிங் மேற்கொண்டு வரும் அனைத்து பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளையும் ஆதரிக்கவும் முடிவு செய்யப்பட்டது என்றார்.












Click it and Unblock the Notifications