கம்யூ. கட்சியின் தளி தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கொலை, சுரங்க மோசடி உள்ளிட்ட 9 வழக்குகளில் சிக்கி சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தளி தொகுதியின் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
பெரியார் தி.க பிரமுகர் பழனியின் படுகொலை வழக்கில் கடந்த 2 மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார் தளி தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன். அவர் மீது கொலை மிரட்டல் மற்றும் சுரங்க மோசடி என அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்துள்ளன. மொத்தம் 9 வழக்கில் சிக்கியிருக்கும் ராமச்சந்திரனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அனுமதி கொடுத்திருக்கிறார். ஆட்சியரின் அனுமதிக் கடிதம் சேலம் சிறையில் ஒப்படைக்கப்படுகிறது.
ராமச்சந்திரனின் சகோதரர் மற்றும் மாமனார் உட்பட 9 பேர் மீது ஏற்கெனவே குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications