டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ்: அமெரிக்காவில் 'பெஞ்சில்' இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த நாடுகளில் நிலவி வரும் பொருளாதாரப் பிரச்சனைகளால் பல்வேறு நிறுவனங்கள் புதிய திட்டங்கள், விரிவாக்கத்தை நிறுத்தி வைத்துள்ளன.
ஆனால், இந்த நிறுவனங்களின் திட்டங்களுக்காக அந்த நாடுகளில் ஏராளமான உள்ளூர் நபர்களை வேலைக்கு எடுத்த டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ் ஆகியவை, அதில் பலருக்கு எந்தப் பணியும் தர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இதனால் இவர்கள் காத்திருக்கும் நிலையில் ('bench') உள்ளனர். இதன் காரணமாக இந்த நிறுவனங்களின் லாபத்தில் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
காண்ட்ராக்ட்களை எளிதாகப் பெறவும், வேலைவாய்ப்புகளை இந்தியா சுருட்டுகிறது என்ற பிரச்சாரத்தை எதிர்கொள்ளவும், அமெரிக்கர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவது போல காட்டிக் கொள்ளவும் பல இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களும் அந் நாடுகளைச் சேர்ந்தவர்களை ஏராளமான பணியில் சேர்த்தன.
முன்பு இவர்களில் கிட்டத்தட்ட 97 சதவீதம் பேர் முழு அளவில் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், இப்போது 90 சதவீதத்தினருக்கே உண்மையில் வேலை உள்ளது. இன்னும் சில சாப்ட்வேர் நிறுவனங்களில் 18 சதவீத வெளிநாட்டு ஊழியர்கள் பெஞ்சில் உள்ளனர்.
இந்தியாவில் என்றால் ஏதாவது காரணத்தைச் சொல்லி வெளியே அனுப்புவது எளிது. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பாவில் ஆட்களை வேலையை விட்டு நீக்கும்போது ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. மேலும் இந்தியாவை விட பல மடங்கு பணத்தை இழப்பீடாகத் தர வேண்டும்.
வழக்கமாக இந்த நாடுகளில் பணியின் அளவு குறையும்போது சில ஊழியர்களை நீக்கிவிட்டு, மற்றவர்களை செலவு குறைந்த நாடுகளுக்கு (குறிப்பாக இந்தியா) அனுப்புவது சாப்ட்வேர் நிறுவனங்களின் வாடிக்கை.
ஆனால், இப்போது அமெரிக்கத் தேர்தல் பிரச்சாரம் உச்சத்தில் இருப்பதால் அமெரிக்க ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவது, உள்ளூர் பணியாளர்களை வேறு நாடுகளுக்கு இடம் மாற்றுவது போன்ற வேலைகளை செய்ய முடியாத நிலைக்கு சாப்ட்வேர் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.
இதைச் செய்யும் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்காவின் ஆளும் தரப்பும், எதிர்க் கட்சிகளும் பிரச்சாரத்தில் இறங்கி ஓட்டு வேட்டைக்கு முயலக் கூடும். இதனால் இந்த நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை கூட எதிர்காலத்தில் பாயலாம்.
மேலும் ஒரு அப்ளிகேஷனில் திறமையாக இருந்தார் என்பதற்காக ஒரு புராஜெக்டுக்காக எடுக்கப்பட்ட ஊழியரை வெறொரு அப்ளிகேஷன் பயன்படுத்தும் இன்னொரு திட்டத்தில் ஈடுபடுத்த முடியாத நிலையும் உள்ளது. குறிப்பாக கோடிங், மெயின்டெனென்ஸ் என்று இருந்த நிலை மாறி இப்போது enterprise mobility, cloud computing and data analytics ஆகிய பிரிவுகளுக்கே அதிக தேவைகள் உருவாகியுள்ளன.
ஆனால், இந்தத் திறமைகள் கொண்ட அமெரிக்க-ஐரோப்பிய ஊழியர்கள் மிக மிகக் குறைவு.
இந்தக் காரணங்களால் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை பெஞ்சில் சும்மா காத்திருக்க வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவின் பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களைப் பொறுத்தவரை மொத்த ஊழியர்களில் 10 முதல் 15 சதவீதம் பேர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ளனர்.
இன்போசிஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை 13,000 பேர் அமெரிக்காவில் மட்டும் பணியாற்றுகின்றனர். விப்ரோவில் 10,000 பேரும், எச்சிஎல் நிறுவனத்தில் 8,000 பேரும், டிசிஎஸ்சில் 6,000 பேரும் அந்த நாட்டில் பணியாற்றி வருகின்றனர்.
இந் நிலையில் அமெரிக்கா, ஐரோப்பாவில் நிலைமை சீராகாத வரை, அதிக செலவு வைக்கும் அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு உள்ளூர் ஊழியர்கள் பெஞ்சிலிருந்து உண்மையான பணிக்குத் திரும்பாத வரை, இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களின் லாபம் அதிகரிப்பது சிரமமே.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications