மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூட்டத்தில் 'கரண்ட் கட்'
சிவகங்கை: தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்ட கூட்டத்தில் 3 முறை மின்தடை ஏற்பட்டதால், அமைச்சரும், கட்சி நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
சிவகங்கை மாவட்ட அதிமுக செயலாளர் கரு.முருகானந்தம் தலைமையில் சிவகங்கையில் நாடளுமன்ற தொகுதி ஊழியர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக நிதிஅமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா, உள்ளாட்சித் துறை அமைச்சர் முனுசாமி, மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தொகுதியில் உள்ள மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் உள்ளிட பலர் கலந்து கொண்டனர். இதனால் கூட்டம் நடைபெற்ற திருமண மண்டபம் நிரம்பி வழிந்தது.
இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் பேசிக் கொண்டிருந்த போது, 2 முறையும், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசிய போது, ஒரு முறையும் மின்தடை ஏற்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக நிர்வாகிகள், நம்ம கூட்டத்திலேயே மின்தடையா என்று அதிர்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications