இந்தியாவின் அதிக எடை கொண்ட ஜிசாட்-10 செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!

இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றில் முதல் முறையாக 3,400 கிலோ எடை கொண்டதாக ஜிசாட் 10 செயற்கைக் கோள் உருவாக்கப்பட்டது. இந்த செயற்கைக் கோள் கடந்த 22-ந் தேதி ஏவ முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ராக்கெட்டின் மேல்பகுதியில் தூசி இருந்ததால் விண்ணில் ஏவுதல் தடைபட்டது. இந்நிலையில் இன்று காலை ஜிசாட்-10 செயற்கைக் கோள் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. செயற்கை கோள் வெற்றிகரமாக அதன் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
ஜிசாட்-10 செயற்கைகோள் சுமார் 15 ஆண்டுகள் பணியாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் முதல் இது இந்திய தொலை தொடர்பு துறையில் முக்கிய பங்கு வகிக்கும். தகவல் தொலை தொடர்பு, தொலைக்காட்சிகளுக்கான டி.டி.எச். மற்றும் வானொலி சேவைகளில் ஜிசாட் செயற்கை கோள் அதிநவீன சேவைகளை வழங்கும்.
ஜிசாட்-10 செயற்கை கோளில் 30 டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் 12-கியூ-பான்ட், 12சி-பான்ட், 6 விரிவுபடுத்தப்பட்ட சி-பான்ட் டிரான்ஸ்பான்டர்களாகும். ஜிசாட்-10ல் ககன் எனும் நவீன சிக்னல் கருவியும் இடம் பெற்றுள்ளது. இநத கருவி மேம்படுத்தப்பட்ட துல்லியமான ஜி.பி.எஸ். சிக்னல்களை தரக்கூடிய ஆற்றல் கொண்டது. விமான சேவையை நிர்வகிக்க, இந்திய விமான நிலையங்களுக்கு இந்த சிக்னல் தகவல்கள் பயன் உள்ளதாக இருக்கும்.












Click it and Unblock the Notifications