பெட்ரோல் பங்குகள் இயங்குகின்றன.. 'ஸ்டிரைக்' இல்லை!
டெல்லி: நாடு முழுவதும் உள்ள 42,000 பெட்ரோல் பங்குகள் இன்றும், நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. இன்றும், நாளையும் பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல செயல்படும் என்று பெட்ரோல் வினியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் வினியோகஸ்தர்களுக்கு கிடைக்கும் வருமானம் பாதிக்காத வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் உயர்வை அமல்படுத்த கோரி, மத்திய பெட்ரோல் நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதை பெட்ரோல் நிறுவனங்கள் கண்டு கொள்ளாமல் விட்டதால், பெட்ரோல் வினியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் இன்றும், நாளையும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக செய்திகள் பரவின.
இதில் நாடு முழுவதும் சுமார் 42,000 பெட்ரோல் பங்குகள் உரிமையாளர்கள் கலந்து கொள்ள உள்ளதாக செய்திகள் பரவின. இந்த நிலையில் இன்றும், நாளையும் வேலை நிறுத்தம் நடத்த போவதாக வெளியான செய்து வதந்தி என்று பெட்ரோல் வினியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பெட்ரோல் வினியோகஸ்தர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
இன்றும், நாளையும் பெட்ரோல் பங்குகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக வெளியான செய்தி வதந்தி ஆகும். நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகள் இன்றும், நாளையும் வழக்கம் போல செயல்படும். எங்களுக்கு ஏற்படும் நிதி நெருக்கடி குறித்து மத்திய பெட்ரோல் நிறுவனங்களுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளோம். ஆனால் வேலை நிறுத்தம் நடத்தும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
பெட்ரோல் வினியோகஸ்தர்களுக்கு போக்குவரத்து மற்றும் செயல்பாட்டு செலவு அதிகரித்துள்ளது. எனவே பெட்ரோல் விநியோகிக்கும் நேரத்தை குறைத்து கொள்ள முடிவு செய்துள்ளோம். இதற்காக வரும் 15ம் தேதி முதல் பெட்ரோல் பங்குகள் ஒரு 'ஷிப்ட்' மட்டுமே செயல்படும். இதன்மூலம் பணியாளர்களின் சம்பளம் மற்றும் மின்சார பயன்பட்டு செலவு குறையும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேஸ் வினியோகஸ்தர் 'ஸ்டிரைக்':
கேஸ் வினியோகத்திற்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை கண்டித்து கேஸ் விநியோகஸ்தர்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கேஸ் வினியோகஸ்தர்கள் சங்கம் அந்த வேலை நிறுத்தத்தை ரத்து செய்துள்ளது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications