காந்தி ஜெயந்தி: குடியரசு தலைவர்-பிரதமர் அஞ்சலி
Subscribe to Oneindia Tamil

தேச தந்தை மகாத்மா காந்தியின் 143வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் இன்று காலையில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அதன்பிறகு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், சுஷில் குமார் ஷிண்டே, ஏ.கே.அந்தோணி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் பாஜக தலைவர் அத்வானி, டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் ஆகியோரும், தேச தந்தையின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பல மதங்களின் முறையின்படி பிரார்த்தனை நடத்தப்பட்டது. மேலும் மகாத்மா காந்திக்கு விருப்பமான பாடல்கள் ஒலிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications