சாத்தூராருக்கு எதிராக அறிவாலயத்தில் உண்ணாவிரதம் ... திமுக தொண்டருக்கு அனுமதி மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தருவதற்காக முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் பணம் கொடுத்து ஏமாந்த திமுக தொண்டர் அண்ணா அறிவாலயத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுத்துள்ளதாக சென்னை மாநகரக் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த ஜே.எம். கோஸ் என்பவர் சாத்தூர் ராமச்சந்திரன் திமுகவில் போட்டியிட சீட் வாங்கிக் கொடுக்க ரூ35 லட்சம் கொடுத்திருக்கிறார். ஆனால் சீட்டும் கிடைக்கவில்லை. சாத்தூர் ராமச்சந்திரனிடம் கொடுத்த பணமும் திரும்ப வரவில்லை.

இதனால் தமக்கு நீதி கிடைக்க திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி சென்னை மாநகர போலீசிடம் மனு கொடுத்தார் கோஸ். ஆனால் சென்னை மாநகரக் காவல்துறை எந்த பதிலையும் தரவில்லை என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கும் போட்டார் அவர்.

இந்த வழக்கு நேற்று நீதிபதி பால் வசந்தகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகரக் காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கடந்த 29-ந் தேதியன்று கோஸ் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கோஸின் மனுவை நீதிபதியும் நிராகரித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+