பயிற்சிக்கு இந்தியாவுக்குதான் ராணுவத்தினரை அனுப்புவோம்: பசில் ராஜபக்சே

இலங்கை ராணுவ வீரர்களுக்கும், அதிகாரிகளுக்கு இந்தியாவில் போர் மற்றும் நிர்வாக பயிற்சி அளிப்பதற்கு தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் தாம்பரம் விமானப்படை பயிற்சி தளத்தில் பயிற்சி எடுத்து வந்த சிங்கள ராணுவ வீரர்கள் தமிழக அரசின் எதிர்ப்பை தொடர்ந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள், தொடர் பயிற்சிக்காக பெங்களூர், அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் எந்த பகுதியிலும் இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்க கூடாது என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறார். பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழர் அமைப்புகளும் இதனையே வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் அளிக்கப்படும் பயிற்சி திட்டம் தொடரும் என்று இலங்கை அமைச்சர் பசில் ராஜபக்சே கூறியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது :
பாரம்பரியத்தை மாற்றமாட்டோம்
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே எங்கள் வீரர்கள் பயிற்சிக்காக இந்தியா, அல்லது பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அந்த பாரம்பரியம் தொடரவே நாங்கள் விரும்புகிறோம். எங்கள் ராணுவ வீரர்களை பயிற்சிக்காக இந்தியாவுக்கு தொடர்ந்து அனுப்புவதில் உறுதியாக இருக்கிறோம். இதில் எந்தவித மாற்றமும் இல்லை.
எங்களிடம் பல்வேறு மாற்று வாய்ப்புகள் இருந்த போதிலும், அந்த திட்டங்களை நாங்கள் ஏற்க மாட்டோம். பாரம்பரியத்தை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை.
இந்தியாவில் சில பகுதிகளில் கிளம்பி இருக்கும் எதிர்ப்புகளால், பயிற்சி திட்டத்தை சீனாவுக்கு மாற்றும் எண்ணம் எங்களிடம் கிடையாது. எங்களின் முதல் தேர்வு இந்தியாதான். அடுத்த தேர்வாக தான் அமெரிக்கா போன்ற பிற நாடுகளுக்கு எங்கள் வீரர்கள் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்படுவர் இவ்வாறு அவர் கூறினார்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications