டிசம்பர் இசைக்கச்சேரி: மியூசிக் அகாதெமி சார்பில் முதல்வருக்கு அழைப்பு
சென்னை: டிசம்பர்மாதம் சென்னையில் நடைபெறும் இசைக்கச்சேரியை தொடக்கிவைக்குமாறு முதல்வர் ஜெயலலிதாவிற்கு மியூசிக் அகாதெமி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மார்கழி மாதம் ( டிசம்பர் - ஜனவரி ) சென்னையில் இசைவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி மியூசிக் அகாதெமியில் இசைவிழா தொடங்குகிறது. மியூசிக் அகாதெமி தலைவர் என்.முரளி, சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்கிழமையன்று முதல்வரை நேரில் சந்தித்து, இசைவிழா நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்தார்.
இது குறித்து கருத்து கூறியுள்ள முரளி கடந்த 2005 ம் ஆண்டு டிசம்பர் இசைவிழாவை துவக்கி வைப்பதற்காக அப்பொழுது முதல்வராக இருந்த ஜெயலலிதாவிற்கு அழைப்பு விடுத்தோம். அப்பொழுது எதிர்பாராத விதமாக சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்டதால் அதற்கான நிவாரணப்பணிகளில் முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டியதாகிவிட்டது. இந்த ஆண்டு இசை நிகழ்ச்சியை தொடக்கிவைக்க முதலமைச்சர் ஜெயலலிதா கண்டிப்பாக வருவார் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications