கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்த கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
கரூர் : கூடங்குளம் அணு மின் நிலையத்தை உடனடியாக செயல்படுத்த கோரி காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் எம்.பி. வெளியிட்ட அறிக்கையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உற்பத்தி துவக்கப்படும் நிலையில் சிலர் வேண்டும் என்றே தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் சுமார் 3 ஆயிரம் மெகா வாட் அதிகமாக மின் பற்றாக்குறை உள்ளது. இதனால் பொதுமக்களும், தொழிற்சாலைகளும், அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆனால் சிலர் வேண்டும் என்றே வேறு நோக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அப்பாவி மக்களை திசை திருப்பி வருகின்றனர். எனவே கூடங்குளத்தின் அவசியம் மற்றும் அவசரம் குறித்து உணர்த்தும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூரில் தாலுக்கா அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட தலைவர் பேங்க்.சுப்பிரமணி தலைமையிலும், கரூர் நகரத் தலைவர் சுப்பன், குளித்தலை நகர தலைவர் சர்புதீன், தாந்தோனி நகரத் தலைவர் ராமலிங்கம், இனாம் கரூர் நகரத் தலைவர் அங்கமுத்து ஆகியோர் முன்னிலையிலும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்த கோரி ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து பலரும் கூடங்குளம் அணு உலையை திறக்க வேண்டும் என்றும், போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரை கைது செய்ய கோரியும் வலியுறுத்தினர்.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications