திருப்பூருக்கு வருகிறார் 'போலீஸ் கமிஷனர்'... கமிஷனரகம் அமைக்க ஜெ. உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: தமிழகத்தின் 7வது போலீஸ் ஆணையரகம் திருப்பூர் நகரில் அமைக்கப்படுகிறது. இதற்கான உத்தரவை முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் மொத்தம் 9 பெருநகரங்கள் உள்ளன. அதாவது இந்த 9 நகரங்களும் மாநகராட்சிகள் ஆகும். தலைநகர் சென்னை தவிர, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, ஈரோடு, தூத்துக்குடி, திருப்பூ்ர் ஆகியவையே இவை.

இந்த ஒன்பது நகரங்களில் தற்போது சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய ஆறு நகரங்களில் மட்டும் காவல்துறை ஆணையர்கள் உள்ளனர். தற்போது 7வது ஆணையகரம் திருப்பூரில் அமையவுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் ஜெயலலிதா பிறப்பிக்கவுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூரில் புதிய காவல்துறை ஆணையரகத்தை தோற்றுவிக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். திருப்பூரில் புதியதாக அமைக்கப்பட உள்ள காவல்துறை ஆணையரகம் ரூ.17 கோடியே 49 லட்சம் செலவில் அமைக்கப்பட உள்ளது.

மேலும் திருப்பூரில் 1,008 காவல்துறை பணியிடத்தை அனுமதித்தும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுதவிர மணப்பாறை, மதுரை அவனியாபுரம், திருப்பத்தூர், குரோம்பேட்டை, தாராபுரம் உள்ளிட்ட இடங்களில் புதிய போக்குவரத்து காவல்நிலையங்கள் அமைக்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 12 புறக்காவல்நிலையங்களும், முழுஅளவிலான காவல்நிலையங்களாக தரம் உயர்த்தப்பட உள்ளன. தரம் உயர்த்தப்படும் இந்த 12 காவல்நிலையங்களிலும், புதியதாக 355 பணியிடங்களை தோற்றுவிக்கவும் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+