அடுத்தடுத்து ஊழல் புகார்... ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி சஸ்பெண்ட்!
ராமநாதபுரம்: பல்வேறு ஊழல் புகார்கள் காரணமாக ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி கோவிந்தராஜுலு சஸ்பென்ட் செய்யப்பபட்டார்.
கேவிந்தராஜுலு மீது பல்வேறு ஊழல் புகார்கள் இருந்தன. இந்நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளை பதிவாளர் உதயன் தலைமையில் ராமநாதபுரம் நீதிமன்றத்துக்கு வந்து, இந்த ஊழல்கள்குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
அந்த விசாரணை அறிக்கை அளிக்கப்பட்டதன் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற ஊழல் கண்காணிப்பு தடுப்பு அதிகாரிகள் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தனர்.
அதன்படி, ராமநாதபுரம் வந்த அதிகாரிகள், மாவட்ட முதன்மை நீதிபதி பணிவிடுப்பில் இருந்ததால், மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி சிவசுப்ரமணியனிடம் கோவிந்தராஜுலுவை தற்காலிக பணிநீக்கம் செய்யும் உத்தரவை வழங்கினர்.
அந்த உத்தரவு நகல், கோவிந்தராஜுலு வீட்டின் வாசலில் ஒட்டப்பட்டது.












Click it and Unblock the Notifications