துரை தயாநிதிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படுமா.. நாளை தெரியும்
மதுரையில் கிரானைட் மோசடி தொடர்பாக கீழவளவு போலீசார் கடந்த மாதம் வழக்குப் பதிவு செய்தனர். இந்த புகாரில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியை கைது செய்யவும் போலீசார் தேடி வருகிறது. இநத நிலையில் துரை தயாநிதியின் முன்ஜாமீன் மனுவை மதுரை உயர்நீதின்றக் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து அவரை கைது செய்ய அவரது மனைவி அனுஷா, அக்காள் கணவர் வெங்கடேஷ், மாமனார் சீதாராமன் உள்பட உறவினர்கள், நண்பர்கள் பலரிடம் விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் துரை தயாநிதியை கைது செய்ய பிடிவாரன்ட் கேட்டு மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மதுரை கீழவளவு போலீசார் நேற்று மனு செய்தனர். மனுவை மாஜிஸ்திரேட் ஜெயக்குமார் விசாரித்தார்.
அப்போது துரை தயாநிதி தரப்பு வக்கீல்கள் வாதிடுகையில், எங்கள் தரப்பிற்கு எந்தவித நோட்டீசும் தரப்படவில்லை. எனவே இந்த மனு குறித்து பதிலளிக்க அவகாசம் தேவை என்று வாதிட்டனர்.
இதையடுத்து பிடிவாரண்ட்டை பிறப்பிக்கக் கோரும் வழக்கின் விசாரணையை அக்டோபர் 10ம் தேதியான நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்ட மாஜிஸ்திரேட், அன்றைக்கு துரை தயாநிதி தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
நேற்றைய விசாரணையின்போது பி.ஆர்.பழனிச்சாமியின் மகன்கள் சார்பிலும் வக்கீல்கள் ஆஜராகி வாதிட்டனர். அவர்களும் நாளை பதில் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.