தமிழகத்தை ஆட்டிப்படைக்கிறது டெங்கு.. பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது

டெங்கு காய்ச்சல் காரணமாக சென்னை மருத்துவமனைகளில் பலரும் அட்மிட் ஆகி வருகின்றனர். சிலர் இறந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் யாரும் இறக்கவில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த 10 நாட்களில் மட்டும் 21 பேருக்கு டெங்கு ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்துள்ளனர்.
டெங்கு பரவலைத் தடுக்க ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சர், அதிகாரிகள் கூட்டம் நடந்துள்ளது. சென்னை மாநகராட்சியும் டெங்கு்ப பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
செவ்வாய், வியாழக் கிழமைகளில் 200 வார்டுகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. வீட்டைச் சுற்றி தண்ணீர் தொட்டி, தேங்காய் ஓடு, குளிர் சாதனப் பெட்டி, டயர், வாளி, ஆட்டுக்கல் குழவி ஆகியவற்றில் தேங்கி நிற்கும் நீரிலிருந்து, ஈடிஸ் வகை கொசு உற்பத்தியாகிறது. இந்தக் கொசுக்கள்தான் டெங்கு காய்ச்சலுக்குக் காரணம். எனவே இப்படி தண்ணீர் தேங்காமல் கவனமுடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சென்னையில் குலாம் நபி ஆசாத் ஆலோசனை
இதற்கிடையே டெங்கு பரவல்தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. அதில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கலந்து கொள்கிறார்.
இக்கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் சுகாதார அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
மதுரையில் 3 பேர் பலி
மதுரையில் பரவிய டெங்குக் காய்ச்சலுக்கு 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூரிலும் டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. அங்கு சிலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுவை யூனியனுக்குட்பட்ட காரைக்காலிலும் டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது இதுவரை அங்கு 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
-
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications