இந்திய மீனவர்கள் 33 பேரை கைது செய்தது பாகிஸ்தான் கடற்படை

Subscribe to Oneindia Tamil

இஸ்லாபாத்: பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக, இந்திய மீனவர்கள் 33 பேரை, பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்திய வெளியறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நடத்திய பேச்சுவார்த்தையில், பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இந்த நிலையி்ல் பாகிஸ்தான் கடற்படையினர், இந்திய மீனவர்களை மீண்டும் கைது செய்துள்ளனர்.

இந்திய, பாகிஸ்தான் கடல் எல்லையில் நேற்று இந்திய மீனவர்கள் 5 படகுகளில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் கடற்படையினர், 33 இந்திய மீனவர்களையும் கைது செய்து, அவர்களின் 5 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களின் மீது, பாகிஸ்தான் கடல்பகுதியில் அத்துமீறி மீன் பிடித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை, இன்று பாகிஸ்தானில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக பாகிஸ்தான் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+