கர்நாடக பயணிகள் ரயிலில் திடீர் தீ- இருவர் பலி- 5 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil

குல்பர்க்கா: வட கர்நாடகப் பகுதியில் குல்பர்க்கா அருகே பயணிகள் ரயிலில் இன்று பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர்.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்திலிருந்து மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் நோக்கி Falaknuma எக்ஸ்பிரஸ் ரயில் வடகர்நாடகப் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது குல்பர்க்கா நகரம் அருகே பிற்பகல் 1.30 மணியளவில் ரயிலின் மூன்று பெட்டிகளில் திடீரென தீ பிடித்தது.

இந்தத் தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் கருகி உயிரிழந்துவிட்டனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

டெல்லியில் தீ விபத்து

இதனிடையே டெல்லியில் க்ரெளன் பிளாசா அருகே உள்ள ஓக்லா துணை மின்நிலையத்தில் திடீரென இன்று பிற்பகல் 2.40 மணியளவில் தீப்பிடித்தது. 14 தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்று தீயை அணைத்தன. இத்தீவிபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+