For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக எம்.பி. தம்பிதுரை மீது நில அபகரிப்பு புகார்.. பாயுமா வழக்கு?

Google Oneindia Tamil News

Thambidurai
சென்னை: திமுகவினர் மீதே அடிக்கடி பாய்ந்து வழந்த நில அபகரிப்புப் புகார்கள் தற்போது அதிமுகவினர் பக்கமும் திரும்ப ஆரம்பித்துள்ளது. அதிமுகவின் முக்கியப் புள்ளிகளில் ஒருவரும், எம்.பியுமான தம்பித்துரை மீது ஒரு நில அபகரிப்புப் புகார் கிளம்பியுள்ளது. ஆனால் அவர் மீது வழக்குப் பாயுமா, அவர் தலைமறைவாரா, கைதாவாரா, சிறையில் தள்ளப்படுவாரா, முன் ஜாமீன் கோருவாரா, ஜாமீன் கோருவாரா, வாய்தா வாங்குவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பெரும்பாலும் திமுகவினர் மீதுதான் நில அபகரிப்புப் புகார்கள் அதிகம் கிளம்பினர். பெரிய பெரிய புள்ளிகள் முதல் சாதாரண பொட்டு வரை எக்கச்சக்கம் பேர் உள்ளே போனார்கள், வந்தார்கள். இந்த நிலையில் அவ்வப்போது அதிமுகவினர் பக்கமும் நில அபகரிப்புப் புகார்கள் கிளம்பியபடிதான் உள்ளன. இருந்தாலும் பெரிய தலை எதுவும் உள்ளே போனதாக தெரியவில்லை.

தற்போது மிகப் பெரிய தலையான தம்பித்துரை மீது ஒரு நில அபகரிப்புப் புகார் கிளம்பியுள்ளது. சென்னை சூளைமேட்டைச்சேர்ந்த மோகன் என்பவர் தம்பிதுரைக்கு எதிராக கோர்ட்டில் வழக்குப் போட்டுள்ளார்.

ஆவடியில் உள்ள தமது நிலத்தை தம்பிதுரை அபகரித்து விட்டதாகவும், இதுகுறித்து காவல்துறை புகார் பதிவு செய்து தம்பித்துரை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

காவல்துறை தம்பித்துரை மீது பாயுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

English summary
A land grab charge has been slapped against ADMK MP Thambidurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X