அதிமுக எம்.பி. தம்பிதுரை மீது நில அபகரிப்பு புகார்.. பாயுமா வழக்கு?
அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பெரும்பாலும் திமுகவினர் மீதுதான் நில அபகரிப்புப் புகார்கள் அதிகம் கிளம்பினர். பெரிய பெரிய புள்ளிகள் முதல் சாதாரண பொட்டு வரை எக்கச்சக்கம் பேர் உள்ளே போனார்கள், வந்தார்கள். இந்த நிலையில் அவ்வப்போது அதிமுகவினர் பக்கமும் நில அபகரிப்புப் புகார்கள் கிளம்பியபடிதான் உள்ளன. இருந்தாலும் பெரிய தலை எதுவும் உள்ளே போனதாக தெரியவில்லை.
தற்போது மிகப் பெரிய தலையான தம்பித்துரை மீது ஒரு நில அபகரிப்புப் புகார் கிளம்பியுள்ளது. சென்னை சூளைமேட்டைச்சேர்ந்த மோகன் என்பவர் தம்பிதுரைக்கு எதிராக கோர்ட்டில் வழக்குப் போட்டுள்ளார்.
ஆவடியில் உள்ள தமது நிலத்தை தம்பிதுரை அபகரித்து விட்டதாகவும், இதுகுறித்து காவல்துறை புகார் பதிவு செய்து தம்பித்துரை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
காவல்துறை தம்பித்துரை மீது பாயுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.