பிடிவாரண்ட் வழக்கில் சென்னை கோர்ட்டின் நாளைய தீர்ப்பு எப்படி இருக்கும்? கலங்கிக் கிடக்கும் டக்ளஸ்

டக்ளஸ் வழக்கு என்ன?
இந்தியாவில் இலங்கை ஆயுதக் குழுக்களுக்கு 1980களில் மத்திய அரசே பயிற்சிகளை அளித்தது. அப்போது ஈ.பி.டி.பி.யின் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவும் சென்னையில் தங்கி இருந்தது. இந்தக் குழு சென்னை சூளைமேட்டில் தங்கியிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரை ஒரு சிறு வாய்தகராறுக்காக துப்பாக்கிய சுட்டுக் கொன்றுவிட்டார் டக்ளஸ். இந்த கொலை வழக்கு சென்னை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் இலங்கைக்கு தப்பி ஓடி அங்கே இப்பொழுது அமைச்சராகவும் ஆகிவிட்டார் டக்ளஸ்.
பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதன் பின்னணி
இந்த நிலையில் டக்ளஸ் தலைமறைவுக் குற்றவாளி என்று ஏற்கெனவே சென்னை அமர்வு நீதிமன்றம் அறிவித்திருப்பதால் அவரைக் கைது செய்யக் கோரி வழக்கறிஞர் புகழேந்தி புதிய மனுத்தாக்கல் செய்தார். இதனால் இந்த வழக்கு பரபரப்பானது. வேறுவழியின்றி இந்த பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி, சென்னை 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா மனுத்தாக்கல் செய்தார். மேலும் தம்மை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்து பிடிவாரண்டை ரத்து செய்யவேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். ஆனால் தமிழக போலீசார் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்த மனு மீதான இறுதிக்கட்ட விசாரணையை நேற்று நீதிபதி ராஜகோபலன் மேற்கொண்டார். பின்னர் தீர்ப்பு நாளை அதாவது 18-ந் தேதி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
நாளை கிளைமாக்ஸ்
இலங்கையில் அமைச்சராக இருந்தாலும் தமிழகத்தைப் பொறுத்தவரையில் அவர் தேடப்படுகிற தலைமறைவுக் குற்றவாளிதான். அவருக்கான பிடிவாரண்ட்டை ரத்து செய்ய முடியாது என்று சென்னை போலீசார் கூறிவிட்ட நிலையில் "கிளைமாக்ஸ்" காட்சியாக நாளைய தீர்ப்புக்காக அலறிப் போய்க் காத்திருக்கிறார் டக்ளஸ் தேவானந்தா!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications