16 கிலோ தங்கத்தில் மீனாட்சி தாயாருக்கு தங்க கொடிமரம் அமைக்கப்படுகிறது
Tamilnadu
oi-Madhivanan
By Mathi
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மீனாட்சி அம்மனுக்கு 16 கிலோ தங்கத்தில் கொடிமரம் அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கிறார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், முதல்வர் ஜெயலலிதாவை நேற்று சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கொடிமரம் அமைக்க வேண்டும் என்ற மதுரைவாசிகளின் கோரிக்கையை முன்வைத்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட முதல்வர் ஜெயலலிதா, 16 கிலோ தங்கத் தகடுகளைப் பயன்படுத்தி புதிய கொடிமரம் அமைக்க உத்தரவிட்டிருக்கிறாராம்!
Chief Minister J Jayalalithaa on Thursday ordered erection of a gold-plated flag staff for Madurai Meenakshi Amman temple in lieu of the very old one existing now. For making the gold plate to be fixed on the surface of the new flag staff, the 16 kg of gold, now in possession of the temple, would be utilised.