சென்னையி்லும் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு: முதல்வருக்கு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் நன்றி
சென்னை: சென்னையில் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பை இன்று முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். இதற்கு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் சங்கத்தினர் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு கேபிள் டிவி அரசு உடமையாக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி முதல்வரின் உத்தரவின் பேரில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் துவங்கப்பட்டது.
இதன்மூலம் சென்னையை தவிர மற்ற 31 மாவட்டங்களிலும் அரசு கேபிள் டிவி சேவை துவக்கப்பட்டது. இதன்மூலம் குறைந்த கட்டணத்தில் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் டிவி சேனல்களை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் அரசு கேபிள் டிவி சேவையை துவங்க தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வந்தது.
நுங்கம்பாக்கம் பகுதியில் தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் உள்ளது. அந்நிறுவனத்தின் மூலம் சென்னை மக்களுக்கு கேபிள் டிவி வழங்கும் தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது.
இதன் பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று சென்னையில் முதல்வர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் இருந்தவாறு வீடியோ கான்பிரன்சிங் முறையில் அரசு கேபிள் டிவி சேவையை துவக்கி வைத்தார். இதனால் நுங்கம்பாக்கம் பகுதியில் உடனடியாக அரசு கேபிள் டிவி சேனல்களை மக்கள் பார்க்க முடிந்தது.
இந்த சேவை படிப்படியாக சென்னை மாநகர் முழுவதும் விரிவுப்படுத்தப்பட உள்ளது. சென்னை மாநகரில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் பதிவு செய்துள்ள சுமார் 2 ஆயிரம் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு லட்சக்கணக்கான செட்-டாப் பாக்ஸ்களை வழங்க வேண்டியுள்ளது.
இதற்காக ரூ.500 முன்பணம் செலுத்தி பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற முறையில் செட்-டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட உள்ளது. கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் செட் டாப் பாக்ஸ் பெற முன்பணம் செலுத்த வரும் 25ம் தேதி கடைசி நாள் ஆகும்.
வாடிக்கையாளர்களுக்கு செட்-டாப் பாக்ஸ் அளிக்கும் பணி முடியும் வரை, துவக்கத்தில் 'அனலாக்' தொழில்நுட்பத்தில் 80 சேனல்கள் ஒளிபரப்படும். அதன்பிறகு சேனல்களின் எண்ணிக்கை படிபடியாக அதிகரிக்கப்படும். அனைவருக்கும் செட்-டாப் பாக்ஸ் கொடுத்த பிறகு அரசு கேபிள் டிவி இணைப்பு பெற்றவர்களும் அனைத்து சேனல்களையும் துல்லியமாக பார்க்க முடியும் என்றார்.
முதல்வருக்கு நன்றி:
சென்னையில் அரசு கேபிள் டிவி ஒளிப்பரப்பு துவங்க நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு, கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு கேபிள் டிவி உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமே என்று பாடிய மகாகவியின் வார்த்தைகள் இன்று கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நெஞ்சில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. கேபிள் டிவி தொழிலை முதன் முதலாக சட்டப்பூர்வமாக்கி தந்து இந்தியாவிற்கே வழி காட்டியாக விளங்கியவர் முதல்வர் ஜெயலலிதா.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தை தொடங்கி வெற்றி கண்டு உலக அரசுகளுக்கே வழி காட்டிய உன்னதர் முதல்வர் ஜெயலலிதா. அரசு கேபிள் டி.வி. குறைந்த கட்டணத்தில் பொது மக்களுக்கு வழங்கப்படும். கடைகோடி கேபிள் டிவி ஆபரேட்டர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற ஜெயலலிதாவின் தேர்தல் வாக்குறுதி இன்று பூரண மாக்கப்பட்டுள்ளது. அதற்காக ஜெயலலிதாவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
வராது என்றார்கள் வல்லவர்கள், வந்தது அரசு கேபிள் டி.வி. தராது என்றார்கள் தரகர்கள். குறைந்த விலையில் வந்தது அரசு கேபிள் டிவி பெறாது கட்டண சேனல்களை என்றார்கள். கட்டண சேனல்கள் எல்லாம் அரசுக்கு கட்டுப்பட்டு தங்கள் சேனல்களை எல்லாம் தந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications