ப.சிதம்பரத்துக்கு எதிரான தேர்தல் வழக்கில் சாட்சி விசாரணை தொடங்குகிறது
சென்னை: மக்களவைத் தேர்தலில் ப.சிதம்பரம் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் நவம்பர் 1-ல் இருந்து சாட்சி விசாரணையை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட சிதம்பரம் தோல்வியடையும் நிலையில் இருந்தார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜகண்ணப்பன் வெற்றி பெறும் சூழல் இருந்தது. ஆனால் திடீரென ப.சிதம்பரம் சொற்ப வாக்குகளில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. அப்போதே இதட்பெரும் சர்ச்சையை கிளப்பியது. பின்னர் ப.சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து ராஜகண்ணப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். சிதம்பரத்தின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று ராஜகண்ணப்பன் தமது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நீதிபதி கே.வெங்கட்ராமன் முன்பு நடைபெற்றது. அப்போது வழக்கின் சாட்சி விசாரணையை நவம்பர் 1-ந் தேதி முதல் நடத்த நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இரு தரப்பினரும் உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவு பிறப்பித்தார்.












Click it and Unblock the Notifications