டாய்லெட் இல்லாத வீட்டு மாப்பிள்ளைகளை நிராகரியுங்கள்.. பெண்களுக்கு ஜெய்ராம் ரமேஷ் சூப்பர் அட்வைஸ்

நாட்டில் கோவில்களைக் கட்டுவதற்குப் பதில் டாய்லெட்கள்தான் அதிகம் கட்டப்பட வேண்டும் என்ற யோசனையை அண்மையில் கூறியவர் ஜெய்ராம் ரமேஷ். இந்த நிலையில் பெண்களுக்கு ஒரு அறிவுரையை கூறியுள்ளார் அவர்.
ஜெய்ப்பூரில் நடந்த பெண்கள் பெருமளவில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், டாய்லெட் வசதி ஒரு வீட்டில் இருக்கிறதா என்பதை முதலில் பாருங்கள். பிறகே அந்த வீட்டுக்கு வாக்கப்பட்டு போங்கள். டாய்லெட் இல்லாத வீடுகளில் பார்க்கப்படும் மாப்பிள்ளைகளை நிராகரித்து விடுங்கள். டாய்லெட் இல்லாவிட்டால் திரு்மணம் கிடையாது என்று திட்டவட்டமாக கூறி விடுங்கள்.
ராகு கேது குறித்தெல்லாம் ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்கிறீர்கள். உங்களுக்குப் பொருத்தமானவராக மாப்பிள்ளை இருப்பாரா என்பது குறித்து ஆர்வம் காட்டுகிறீர்கள். ஆனால் உங்களது ஆரோக்கியத்தையும், சுற்றுச்சூழல் குறித்தும் நீங்கள் அக்கறை காட்ட வேண்டும். அதுவும் முக்கியம்தானே... டாய்லெட் இல்லாத வீட்டில் நீங்கள் எப்படி நிம்மதியாக வசிக்க முடியும்.
திறந்தவெளிகளில் மல ஜலம் கழிப்போர் தயவு தாட்சன்யன்மின்றி கைது செய்யப்பட வேண்டும். ரயில்களில் தினசரி 2 கோடி பேர் பயணம் செய்கிறார்ள். ஒரு நாளைக்கு 50,000 ரயில் பெட்டிகள் இயக்கப்படுகின்றன. ஒரு கோச்சில் நான்கு டாய்லெட்கள் உள்ளன. இவற்றில் கழிக்கப்படும் மலம், சிறுநீர் எல்லாம் அப்படியே திறந்த வெளியில்தான் விடப்படுகின்றன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications